Islamic Widget

April 16, 2012

பரங்கிப்பேட்டையில் தொடங்கியது கிரிக்கெட்



பரங்கிப்பேட்டை:காயிதே மில்லத் கிரிக்கெட் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு உஸ்மான் கோப்பை 2012 ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி வாத்தியாப்பள்ளித் திடலில் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமைக் காலைத் துவங்கியது.
19ம் தேதி முடிய ஐந்து நாட்கள் நடக்கவிருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை சுற்று வட்டாரத்திலிருந்து பல்வேறு குழுக்கள் மோதுகின்றன.
பலதரப்பட்ட பரிசுத் தொகைகளை உள்ளடக்கிய இப்போட்டியின் விழாக் குழுவினரில் ஒருவரான பக்ருத்தீன் (பாபா)விடம் கிரிக்கெட் பற்றிக் கேட்டோம்.


18 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். கடலூர் வரை சென்று விளையாடியுள்ளோம், இன்னும் மாநில அளவில் செல்லவில்லை, இன்னும் அதிகமான பயிற்சிக்கு பிறகு செல்வோம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் போது நடத்தப்படும் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளால் மாணவர்களின் படிப்பு கெடும் என்பது ஓரளவு உண்மைதான் போன்ற விபரங்களை பகிர்ந்துக் கொண்டார்.
ஆட்டத் துவக்கத்தில் தவ்ஹீத் பந்தை வீச ஜி. நெய்னா மரைக்காயர் பேட்டிங் செய்து முதல் அணியை உற்சாகப்படுத்தினார்கள்.

நன்றி:pnotimes

No comments:

Post a Comment