Islamic Widget

March 21, 2012

பரங்கிப்பேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!


பரங்கிப்பேட்டை,மார்ச் 21 : பரங்கிப்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் நாளை (22ம் தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் அரிமா சங்கம், கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (22ம் தேதி) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை நடக்கிறது.
அரிமா சங்கத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட ஆளுனர் கல்யாணகுமார் துவக்கி வைக்கிறார்.முகாமில் செல்வி.ராமஜெயம் எம்.எல்.ஏ., வட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment