Islamic Widget

February 26, 2012

மாவட்ட உரிமையியல் நீதிபதி…



பரங்கிப்பேட்டை வட்ட சட்டப் பணிக்குழுவின் சார்பாக டெல்லி சாஹிப் தர்கா வளாகத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டத்துறை வழக்கறிஞர்கள் உட்பட, மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் ஈஸ்வர மூர்த்தி B.sc.,LLB தலைமை ஏற்று நடத்திய இந்நிகழ்ச்சியில் சட்டத் துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளியை குறைத்து பொதுமக்கள் பலன்பெரும் வகையில் இலவச சட்டப்பிரிவு இயங்குவதுசுட்டிக் காட்டப்பட்டது.


மிக எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் அவர்களின் பிரச்சனைகளு்ககு சட்ட தீர்வு அளிக்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டன.
டெல்லி சாஹிப் தர்கா வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய குமுரல்கள் எதிரொலித்தன. நிறைய பெண்கள் மனுக்கள் கொடுத்தார்கள்.


இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் ஆரிப், செயலாளர் ஷாஜஹான், பிஎன்ஓடைம்ஸ் சார்பாக ஜி.நிஜாமுத்தீன் ஆகியோர் சட்டம் குறித்து கேள்விகள் எழுப்பினர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நீதிபதிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
இறுதியாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொருளாளர் கலிகுஜ்ஜமான் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி முடிவுப்பெற்றது.



2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்து நீக்கப்பட்து

      Delete