Islamic Widget

January 11, 2012

பரங்கிப்பேட்டையில் சாலை மறியல்!


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இன்று 11.01.2012 காலை 11.45 மணியளவில் 8-வார்டு உறுப்பினர் அருள் முருகன், 7-வது வார்டு உறுப்பினர் அம்சவேணி,4 - வது வார்டு உறுப்பினர் தருமபிரகாஷ், மற்றும் 2-வார்டு உறுப்பினர் (பசிரியாமா) ஜாபர் ஆகியோரின் தலைமையில் பரங்கிப்பேட்டை பெரிய மதகு அருகில் முட்லூர்-புதுசத்திரம் சாலை சந்திப்பில் தானே புயலால் பாதிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவராணம் வழங்காதை கண்டித்து சாலை மறியல் நடைப்பெற்றது.
இந்த சாலை மறியலால் சிதம்பரம் மற்றும் கடலூர் செல்பவர்கள் மிகுந்த பாதிப்புயடைந்துள்ளனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சமரசம் முயற்சி மேற்கொண்டும் சாலை மறியலை மக்கள் கைவிடவில்லை.












இந்த சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.


நன்றி:tntjpno

No comments:

Post a Comment