கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மேலிட அழைப்பின் பேரில் இன்று பகல் 2 மணிக்கு விமானம் மூலம் டெல்லி விரைந்துள்ளார். இவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்த இவர் இரண்டு முறை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்புடையவர்.
பாராளுமன்றத்தில் புள்ளி விவரமாக பேசும் ஆற்றல் கொண்டவர். பொதுக்கூட்டங்களிலும் சிதம்பரத்தை போலவே தெள்ளத் தெளிவாக பேசி தொண்டர்களை கவரக்கூடியவர். அ.தி.மு.க.,- தி.மு.க., தலைமைக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற முத்திரையை குத்திக் கொள்ளாதவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மூப்பனாருடன் நெருங்கி பழகிய அனுபவம் இருப்பதால், மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்களையும் அவரணைத்து செல்லக்கூடியவர் என்ற தகுதி அழகிரிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
சிறந்த பேச்சாளர் - புள்ளி விவரங்களுடன் பேசக்கூடிய இவர் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்த இவர் இரண்டு முறை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்புடையவர்.
பாராளுமன்றத்தில் புள்ளி விவரமாக பேசும் ஆற்றல் கொண்டவர். பொதுக்கூட்டங்களிலும் சிதம்பரத்தை போலவே தெள்ளத் தெளிவாக பேசி தொண்டர்களை கவரக்கூடியவர். அ.தி.மு.க.,- தி.மு.க., தலைமைக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற முத்திரையை குத்திக் கொள்ளாதவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மூப்பனாருடன் நெருங்கி பழகிய அனுபவம் இருப்பதால், மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்களையும் அவரணைத்து செல்லக்கூடியவர் என்ற தகுதி அழகிரிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
சிறந்த பேச்சாளர் - புள்ளி விவரங்களுடன் பேசக்கூடிய இவர் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்
No comments:
Post a Comment