Islamic Widget

March 27, 2011

தினத்தந்தி செய்தி: TNTJ பொதுக்குழுவும்,முதல்வர் சந்திப்பும்

இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர் சென்னை, மார்ச்.27- : முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க

இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தி.மு.க. அறிவிப்பு

ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.

இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.


நன்றி: tntjpno

8 comments:

  1. பி.ஜெ நானா ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம் என்று ஏன் செல்லுரிர்கள் tntjவினர் மட்டும் முடிவெடுத்திருக்கிறோம் என்று செல்லுங்கள்

    ReplyDelete
  2. yengada dei. karunanithi aatchi il than kalavaran nadakudhu, jayalalitha aatchi il sattam olungu sariya irukku nu sonna anda vai ya ippo yengada thooki vachi irukeenga. Porattan pannurom, dawa pannurom nu panam kettu vandhinga... pitchai karana kooda nalla varthai solli anuppuvom.. aana ungalukku

    ReplyDelete
  3. dai ameen unnaku thairiyum irutha ithey varathaiyae TNTJ office le vanthu solluda.. unnay ampulendu othukuran..

    ReplyDelete
  4. yeenae parimatram nadanthathooo....

    ReplyDelete
  5. visit following new blog
    http://emparangipettai.blogspot.com/

    ReplyDelete
  6. எனக்கு ஒரு ஓட்டுதான் இருக்கு ,இதுலே யாரு போடுறது ....?

    எங்கு எல்லாம் நம்ம ஆளுங்க நிக்கிராங்களோ அவர்களுக்கு ஊடு அளியுங்கள் P.J நானா சொன்னாரு , இவரு சொன்னாரு போடதிங்கே , நமது சமுதாயத்தில் பல குழப்பவாதிகள் இருகிறார்கள், முழமையாக அவர் அவர் சுயலாபத்திற்காக மக்கள் தொண்டுனு நம்மே கூறு போடுறாங்க... விழிப்புடன் இருங்கள் ..

    நம்ம ஊருக்கு நம்ம ஊரு ஆள் வந்தால் தான் நம்தூருகு நன்மை..

    யோசியுங்கள்.... மக்களே..

    இவர்கள் இன்று DMK yenbargal nalai AIDMK என்பார்கள்.

    பரங்கிபேட்டை சமுதாயம் சிந்தியுங்கள்,

    மற்றவர் வந்தால் ஏலக்சனுக்கு ஏலக்சனு ரோடு போடுவங்கே .. இதற்கு 4 வருடம் காத்து இருக்க வேண்டும் .

    சிந்தியுங்கள்,

    இவர்கள் சொளுகிரர்கள் என்று நமது கதி என்னே


    பரங்கிபேட்டை சமுதாயம் சிந்தியுங்கள்,

    ReplyDelete
  7. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்தது போல,சஹாபாக்களையும் நபிமார்களையும் குறை கூறி,தன் சுய கருத்தை குர்ஆனில் புகுத்திய இஸ்லாமிய எதிரிகளின் கை கூலி இஸ்லாத்தின் துரோகி மரண தண்டனை கைதி பி.ஜே(துரோகி இருக்கும் நிலையில் மஹதி-அலை- வந்துவிட்டால் இவன் தலை உருட்டப்படும்). இவரை வணகும் கூட்டத்தின் பெயர் தான் த.த.ஜ.

    ReplyDelete
  8. முஸ்லிம்கள் ஒவ்வோருவரும் இறைவனின் குர்ஆனை படித்து அவர்களுக்கு புரிந்தவரை பின்பற்றி எல்லா முஸ்லிம்களையும் சகோதரர்களாக அரவணைத்து கொண்டு ஐவேலை தவறாமல் தொழுது இறைவன்பால் உதவி தேடுங்கள் சமுதாய பிரச்சினைகளை அல்லாஹ் பார்த்து கொள்வான் அதனை விட்டு ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலைவனை தேர்வுசெய்து அவர்கள் கூறுவதை கேட்டு அது மட்டும் தான் நேர்வழி மற்றவர்கள் தவறான வழியில் செல்கின்றனர் என்று மற்றவர்களை குறைகூறி கொண்டு திரியும்வரை சமுதாயம் இதேநிலையில் தான் இருக்கும் யார் நேர்வழியில் இருப்பது என்று அல்லாஹ் தான் அறிவான் உண்மையில் நேர்வழியில் இருப்பவார்கள் ஒருபோதும் தாங்கள் நேர்வழியில் இருப்பதாக கூறமாட்டார்கள் ஏதோ முடிந்தவரை அல்லாஹ் கூறிவற்றை அல்லாஹ் அருளினால் பின்பற்றுகின்றேன் என்று கூறுவார்கள்.

    ReplyDelete