Islamic Widget

November 08, 2010

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிள்ளை சுற்றுப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட் டையை இணைக்கும் வகையில் பொன்னந் திட்டு வெள்ளாற்றில் புதியப்பாலம் கட்டி திறக்கப் பட்டுள்ளது.


திறப்பு விழாவைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கடற் கரையையொட்டி பரங்கிப் பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத் தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.கிள்ளை பகுதியினர் மற்றும் வெள்ளாற்றிற் கும் தெற்கு பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்றியத் தின் தலைமையிடமான பரங்கிப்பேட்டைக்கு சிதம்பரம் வழியாக சுற்றி செல்கின்றனர்.எனவே சுற்றுப்பகுதியினர் பயன்பெறும் வகையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளை, பொன் னந்திட்டு வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார் பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


Source: Dinamalar  photos pno.news

No comments:

Post a Comment