கிள்ளை:சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவு வகுப்பு மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் நேற்று காலை கல்லூரி நுழைவு வாயிலில் நின்று கொண்டு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும். எம்.எஸ்சி., கணிதம் பாட வகுப்பு துவக்க வேண்டும். சமச்சீர் கல்வி கொண்டு வருவதுடன், மற்ற நாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தலையிடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மற்ற துறை மாணவர்கள் ஸ்டிரைக்கிற்கு ஒத்துழைப்புத் தராமல் கல்லூரிக்குள் சென்றனர்.
இதனால் ஆவேசமடைந்த கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தாக்க முயன்றதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ் பெக்டர் மாரிமுத்து மற் றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்படாத கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டுச் சென்றனர். மற்ற துறை மாணவர்கள் வழக் கம் போல் வகுப்புக்குச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- 52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் - ராணுவத்தில் 12 பேருக்கு பதக்கம்
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- காஸ் ஆட்டோ தீ பிடித்து எரிந்தது பயணிகள் ஓட்டம்
- பரங்கிப்பேட்டையில் கடும் பனிமூட்டம்!
- கூட்டுறவு வங்கிகளில் வெள்ள நிவாரணத்தை விவசாயிகள் பெறலாம்; கடலூர் கலெக்டர் அறிவிப்பு
- ஈகைத் திருநாள் கத்தார்வாழ் பரங்கிப்பேட்டை நன்பர்கள்.
- பேட்டையை புரட்டி போட்ட புயல் வீடியோ துளி
- கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தில் 62 வது குடியரசு தின விழா!
- அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்.
No comments:
Post a Comment