Islamic Widget

August 31, 2010

108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபருக்கு வலை

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் சாலை விபத்தில் படுகாயமடைந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் முனுசாமியை புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ..

இதனையடுத்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. ஏன் தாமதமாக வந்தீர்கள் எனக் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ்ராவை, அதே பகுதியைச் சேர்ந்த வேலு தாக்கினார். இதுகுறித்து ராஜேஷ்ராவ் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து வேலுவைத் தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment